மனவாதை அடைந்த கனபாதகன் வஞ்சம்

மனவாதை அடைந்த கனபாதகன் வஞ்சம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

243. இராகம்: ஆனந்தபைரவி                    அடதாளசாப்பு (445)

 

                             பல்லவி

 

          மன வாதை[1] அடைந்த கனபாதகன் வஞ்சம்

            அறவே கிருபை கூர், ஐயா,

 

                             அனுபல்லவி

           

            ஜனவானவர் சங்கம் அனைவோரும் வணங்கும்

            தவிராஜ[2] சுதந்தரா, திவ்ய ஏசு நாதேந்திரா - மன

 

                             சரணங்கள்

 

1.         பாவிக்குந்தன்மேல் விசுவாசமே-திருப்

            பாதம் துணை தரும் விலாசமே,

            ஜீவனே, நீர் எனக்கதி நேசமே;-தேவரீர்

            சித்தத்தின்படி நடக்கச் செய்யும், ப்ரகாசமே - மன

 

2.         கடி[3]யும் கொடுமையாகச் சீறுதே; மாய

            கலக உலகும் பழி கூறுதே;

            சடமும்[4] திடம் இல்லாமல் மாறுதே;-மிகத்

            தயங்கி, மனதெல்லாம் வே[5] சாறுதே, சுவாமி - மன

 

3.         நியாயப் பிரமாணம் குற்றம் சாட்டுதே; என்றன்

            நடக்கை எலாம் பொல்லாப்பில் மட்டுதே

            மாயப் பிரபஞ்சம் இச்சை காட்டுதே, பாவ

            வழியில் என்னை இழுத் தாட்டுதே, சுவாமி - மன

 

4.         கங்குல் பகலும் கண்ணீர் ஓட்டுமே;-நித்தம்

            கவலை பிடித்தென் முகம் வாட்டமே;

            எங்கே பார்த்தாலும் மா போராட்டமே;-கெட்ட

            ஏழைக்குன் பதத்தில் மன்றாட்டமே, சுவாமி - மன

 

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] துன்பம்

[2] தாவீது

[3] பிசாசு

[4] உடல்

[5] சோர்வு

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே