மா துன்ப மே அடைந்தோர் மறு லோக
99. இராகம்: பைரவி. தாளம்: ஆதி.
சகல பரிசுத்தவான்களின் திருநாள் - நவம்பர் முதல் நாள்
“ஆ! இன்ப காலமல்லோ” - என்ற மெட்டு
பல்லவி
மா
துன்ப மே அடைந்தோர்
- மறு லோக
வாழ் வின்ப
மே அடைந்தார்
அனுபல்லவி
பூவின்ப
மேன்மையைப் போக்கும்து
ரிச்சையை
பொன்னுலக
வாஞ்சை தன்னில்
மனம் வையும் - மா
துன்ப
சரணங்கள்
1. பரிசுத்த
வான்கள் அதோ
- பரலோக
வாசிகள்
நாங்க ளென்றே
தரிசித்து
இயேசுவையே - வணங்குகிறார்
சாஷ்டாங்கம்
தொண்டனிட்டு
கரிசனை
யோடே நாம்
கடவுளைத்
துதிப்போமே
வரிசையுடன்
நின்று வாழ்த்துங்
கவிபாடி - மா
துன்ப
2. முத்திரை
போடப் பட்டோர் - நெற்றிதனில்
முகருந்
தரிக்கப்
பட்டோர்
நித்திய
காலமதாய்
- பரமனின்
நீடூழி
இராச்சியத்தில்
பக்தியு
டன்வளர் பாங்குசிங்
காசனம்
சுற்றிலும்
நின்றுபி
தாவைத் தொழுகிறார்
- மா துன்ப
3. சகலப
ரிசுத்தரும்
- திருவுள்ள
சாட்சிய
ளித்தவரும்
பகலும்
இரவு மில்லா
- மோட்சமதில்
பாடுறார்
சங்கங் கூடி
எண்ணுக்க
டங்கிடா ஏகப்பெ ருங் கூட்டம்
எல்லாம்
தரித்தது வெள்ளையங்
கிமட்டும்
- மா துன்ப
4. மரித்தோர்
உயிர்த்தோரும்
- மானிலத்தில்
மாளா
திருப்போம்
சிறுத்தோர்
பெருத்தோரும்
- சீமைகளில்
செந்தமிழ்
கற்றோரும்
நாலா சாதி
பாடை நாற்றிசை
மாந்தரும்
நாதன் திருச்சபை
ஐக்கிய மாகிறார்
- மா துன்ப
5. விசுவாசம்,
சாந்தம், அன்பு
- வைராக்கியம்
வேண்டும்
பொறுமை, உண்மை
சகோதர சிநேகம்,
கற்பு - கபடில்லாத
தாழ்மை,
ஆவி யெளிமை
இருதய சுத்தமோ
டெங்கும்
சுவிசேடம்
எடுத்துச்
சத்ய சாட்சி
கொடுத்து உயிர்
விட்டு - மா துன்ப
6. மேன்மை
உயிர்த்தெழுதல்
- அடைந்திட
மிகவும்
வாதிக்க்பபட்
டார்
பூமி வெடிப்பில்
னுள்ளும்
- மலைக் குகைப்
பொந்து
புடைகட் குள்ளும்
நிந்தைய
டிபட்டுக்
காவல் கல் லெறிபட்டு
மந்தை மந்தையாக வாளால றுப்புண்டு
- மா துன்ப
7. வெள்ளாட்டுத்
தோல்களையும் -
வெருண்ட
செம்மறித்
தோல்களையும்
கள்ளந
டிகரைப் போல்
- போர்த்துக்
கடி பட்டார்
நாங்களாலே
எண்ணெய்க்
கொப்பரை காய்ச்சி,
இரு பக்கம் பொரிபட்டு
வண்ணமே
னிகளை வழித்திடக்
கொடுத்திட்டு
- மா துன்ப
8. தெரிந்து
கொள்ளப் பட்டோரே
- கிருபையாய்த்
தேவாட்டுக்
குட்டி இரத்தம்
மருந்
தென்னும்
நற்கருணை
- சமயமாம்
வாங்குவீர்
பிர சாதம்
கிறிஸ்துவின்
ஞான சரீரத்தின்
ஐக்கியம்
கிடைத்திட
மேன் மேலும்,
கெஞ்சுங்கள்,
கெஞ்சுங்கள்
- மா துன்ப
9. நானா
வித வாசம் - பொருந்திய
நற்கந்த
புட் பங்களை
கானாவூ
ரிலொருவன்
- சேர்த்துக் கட்டி
காட்டும்
பூச் செண்டது
போல்
மேனாள்
திருச் சபை,
மேம்படு பக்தரை
ஞானமு
டன் கூட்டி,
நம் கையில் தந்தனர்
- மா துன்ப
- S. உவால்டர்
கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment