மீட்பர் இயேசுவே கோரச்
பல்லவி
மீட்பர் இயேசுவே
- கோரச்
சிலுவை
மீதினிலே
குருசில்
மரித்தாரே
காயங்கள்
அடைந்தே - மீட்பர்
சரணங்கள்
1. கால்கள்
கைகளிலே
ஆணிகள்
அறைந்தனரே
முட்
கிரீடம் சூடியே
மூன்றாணி
மீதிலே
கர்த்தர்
இயேசு தொங்கினார்
- மீட்பர்
2. கள்ளர்
மத்தியிலே
கள்ளன்
போல் தொங்கினாரே
இத்தனை
பாடுகள் உந்தனின்
வாழ்வுக்காய்
சொந்தமாய்
ஏற்றுக்கொண்டார்
- மீட்பர்
3. இரத்த
வெள்ளத்திலே
அன்பின்
வெள்ளம் பாய்ந்திடுதே
அலைந்து
திரிந்திடும்
ஆடுகட்காகவே
நல் மேய்ப்பர்
பலியானார்
- மீட்பர்
4. பாவ சாபங்களும்
தீரா
ரோகங்கள்
அனைத்தும்
சுமந்தார்
சிலுவையில் தம்
சரீரமதிலே
இன்றே
சுகமடைவாய்
- மீட்பர்
5. பேரின்ப
வாழ்வதனை
பெற்று
நீயும் ஆனந்திக்க
நேசர்
இயேசுவை இன்றே
நம்பி வந்திடுவாயே
பாசமாய்
ஏற்றுக்கொள்வார்
- மீட்பர்
Comments
Post a Comment