பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே - உன்

பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

179. இராகம்      (போற்ற வாரும் பெத்லேம் நகர்)                                (135)

 

பல்லவி

 

                        பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே - உன்

                        பக்தரிருவரை பாலிய தோழரை

 

அனுபல்லவி

 

                        சேரும் நின்னருள் பெற்று சுகித்திட, ஜெகத்தினில்

                        உம்மையே போற்றித் துதித்திட

 

1.         ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே

            அன்று ஏதேனில் இணைத்த இறைவனே

            இன்று தாசரிருவர் இந்நிலைக் குட்பட

            ஏசுவே உம்மையே ஏற்றித் துதித்திட - பாருமுந்தன்

 

2.         ஆரஞ்சு புஷ்பத்தின் மணமோ அல்லதிது

            அழகான மல்லிகைப் பூவின் மணமோ இவர்

            சூடியிருக்கும் இந்த பிச்சியின் மணமோ

            ஜொலிக்குது ....................... அம்மாள் ஜோதிப்பட்டாடையே - பாருமுந்தன்

 

3.         பச்சை நவரத்ன முத்து இலங்கிடும்

            பாலிய அழகிய ....................... அம்மாளும்

            மெல்லநடையதை சிங்காரமாக்கிட

            சேர்ந்து தம்பதிகளை ஆசீர்வதித்திட - பாருமுந்தன்

 

4.         கோத்திரத்திலிவர் எப்ராயீம் போலவும்

            வாய்த்திறத்தில் ஆரோன் ஆரியர் போலவும்

            நீதி நெறி தவறாது நடக்கவும்

            நித்திய பாக்கியம் என்றும் கிடைக்கவும் - பாருமுந்தன்

 

5.         சொல்லின் கற்புள்ள ................. அவர்களும்

            ஜேசருளால் நல்ல புத்திர பாக்கியம்

            பெற்று மகிழ்ந்திட உற்று வளர்ந்திட

            இத்தருணம் வரவேண்டி மன்றாடுகிறோம் - பாருமுந்தன்

 

6.         மணவாளன் ................... அவர்களும்

            மணவாட்டி ................... அம்மாளும்

            இவர்களிருவரும் இணை பிரியாப்படி

            என்றும் கனிந்து மகிழ்ந்து சுகிக்கவும் - பாருமுந்தன்

 

7.         சந்ததம் சந்ததம் அம்மான் ஏசு நாதர்க்கே

            மங்களம் பாடகர் மற்றும் சபையோர்க்கே

            தாசன் .............. ஐயர்க்காவி உண்டாகவே

            தாசரிருவர்க்கும் ஆவி உண்டாகவும் - பாருமுந்தன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே