பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே - உன்
179. இராகம் (போற்ற வாரும் பெத்லேம் நகர்) (135)
பல்லவி
பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே -
உன்
பக்தரிருவரை
பாலிய தோழரை
அனுபல்லவி
சேரும்
நின்னருள் பெற்று சுகித்திட,
ஜெகத்தினில்
உம்மையே
போற்றித் துதித்திட
1. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே
அன்று ஏதேனில் இணைத்த இறைவனே
இன்று தாசரிருவர்
இந்நிலைக் குட்பட
ஏசுவே உம்மையே ஏற்றித்
துதித்திட - பாருமுந்தன்
2. ஆரஞ்சு புஷ்பத்தின்
மணமோ அல்லதிது
அழகான மல்லிகைப் பூவின் மணமோ இவர்
சூடியிருக்கும் இந்த பிச்சியின் மணமோ
ஜொலிக்குது ....................... அம்மாள்
ஜோதிப்பட்டாடையே - பாருமுந்தன்
3. பச்சை நவரத்ன முத்து
இலங்கிடும்
பாலிய அழகிய ....................... அம்மாளும்
மெல்லநடையதை
சிங்காரமாக்கிட
சேர்ந்து தம்பதிகளை ஆசீர்வதித்திட - பாருமுந்தன்
4. கோத்திரத்திலிவர்
எப்ராயீம் போலவும்
வாய்த்திறத்தில்
ஆரோன் ஆரியர் போலவும்
நீதி நெறி தவறாது நடக்கவும்
நித்திய பாக்கியம் என்றும் கிடைக்கவும்
- பாருமுந்தன்
5. சொல்லின் கற்புள்ள ................. அவர்களும்
ஜேசருளால் நல்ல
புத்திர பாக்கியம்
பெற்று மகிழ்ந்திட உற்று வளர்ந்திட
இத்தருணம் வரவேண்டி மன்றாடுகிறோம் - பாருமுந்தன்
6. மணவாளன் ................... அவர்களும்
மணவாட்டி ................... அம்மாளும்
இவர்களிருவரும்
இணை பிரியாப்படி
என்றும் கனிந்து மகிழ்ந்து சுகிக்கவும்
- பாருமுந்தன்
7. சந்ததம் சந்ததம் அம்மான் ஏசு நாதர்க்கே
மங்களம் பாடகர் மற்றும் சபையோர்க்கே
தாசன் .............. ஐயர்க்காவி உண்டாகவே
தாசரிருவர்க்கும்
ஆவி உண்டாகவும் - பாருமுந்தன்
Comments
Post a Comment