180. செஞ்சுருட்டி ஆதி
தாளம் (136)
பல்லவி
மங்களமே
மங்களமே மங்களமே மங்களமே
மங்களமே
மங்களமே சுபஜெய மங்கள மங்களமே
1. சீர்வளர் தயாபரவரனேவர ஏர்வளர் பரமசுத்தாவியே
வா
ஓர்முகம் காட்டிட பாட்டொலி கேட்டிட
நன்முடி சூட்டி நல்வரம் காட்டிவா - மங்களமே
2. அன்று கானாவில் சென்றது வண்ணமே
இந்தநாள் மணம் செய்யுமிவர்க்கருள்
வாழ்த்தித் துதித்திட ஏற்றிப்புகழ்ந்திட
போற்றி மகிழ்ந்திட சோபனம் செழித்திட - மங்களமே
3. எள்ளினுள் எண்ணெய் இசையும் வண்ணம்
மன்னன் ...... மங்கை .....
பண்பதாய் கூடி அன்பினில் நாடி
உன் தயை தேடி இன்பமாய் வாழ்ந்திட - மங்களமே
4. உற்றோர் பெற்றோர் மணமக்கள் வாழ்ந்திட
சுற்றோர் மற்றோர் யாவரும் ஓங்கிட
வற்றா உனினருள் பெற்றுத் திருவடி
கற்றுத்திருமொழி களிக்கச் செழித்திட - மங்களமே
No comments:
Post a Comment