242. இராகம் ஆனந்தப் பண்டிகையை ஆசரிப்போம் (194)
பல்லவி
சந்ததம்
உந்தனையே எந்தனிருதயத்தில் வைக்க
அனுபல்லவி
எந்தனிருதயத்தில் வைக்க எந்தனிருதயத்தில்
வைக்க
1. எந்தனின் சிந்தையது உந்தனையே தேடுதையா
தேடுதையா தேடுதையா உந்தனையே தேடுதையா
தேடியே நாடியுந்தன் பாதமடிபணிந்தேனையா
- சந்ததம்
2. சீர்மிகும் இச்சபையில் செந்தமிழைச் சொல்வதற்கு
சொல்லி வெகு இனிமையுடன் பாடிவரும் பாவலர்க்கு
ரட்சண்ய பாதைதனையே திறந்து காட்டுமையா - சந்ததம்
3. பிடில் மிர்தங்கமுடன் பேசுதே கைத்தாளங்களும்
நாதங்களைத் தானிழந்து நாதரேசுவைப் பணிந்து
நன்றியைக் காட்டுமுந்தன் நண்பரோடு வாருமையா - சந்ததம்
No comments:
Post a Comment