பல்லவி
வா வா பாவி
அழைக்கிறார் இயேசு
ஆவலாய் தம்மிடம் - ஆ ஆ ஆ
அனுபல்லவி
தேவ குமாரன் தானே
தேடியுனை
அலைந்தாரே
- 2
தேவ கோபம் வருமுன்னே
ஜீவன் பெறத் தடை என்ன? - வா
வா
சரணங்கள்
1. தன்னிடம் வருவோர் எவரானாலும்
தள்ள மாட்டார் இயேசு - 2
உன்னிடம் அன்போடவர்க்கு
உருக்கமும் உண்டு அதற்கு - 2
உண்மையான அத்தாட்சி - (2)
தன்னைக் கொடுத்ததே சாட்சி - வா வா
2. வருந்தி நீ பாவப்பாரம்
சுமப்பதைப்
பார்க்கச் சகிக்காமல்
வருந்தி அழைக்கிறார் இயேசு
வந்து அவரிடம் பேசு
திருந்தி மனங்
கொண்டு வந்தால்
அறிந்திடுவாய்
அவரன்பை - வா வா
3. கல்மனமோ கல்வாரியைக் கண்டும்
கரையாதோ உன் உள்ளம்
நில் சிலுவையண்டை
சற்றே
நீசக் கோலம்
தான் உற்றே
நீசன் உன்னையே மீட்டாரே
பாசமாய் அழைக்கிறார் தாமே - வாவா
4. ஆனந்த பாக்கியம் நீ அடைந்திடுவாய்
அவர் பிள்ளையாகும்போது
- 2
கானம் இசைத்து நீ மகிழ்வாய்
கர்த்தரின் நாமம் புகழ்வாய் - 2
தானங்கள் பலவுமே
பெறுவாய் - (2)
வானவர் வரவில் இன்புறுவாய்
- வா வா
No comments:
Post a Comment