02 June 2018

சித்திரவர்ணப் பொற்சரிகை சேலையுடுத்தி - இரு


182.          (138)

1.       சித்திரவர்ணப் பொற்சரிகை சேலையுடுத்தி - இரு
            செவ்விழிக்கு மையுமின்னும் மஞ்சள் குளித்து

2.         ரத்தின மூக்குத்தி புல்லாக்கும் தரித்து
            இன்பமாய் முருகு கம்மல் காப்பும் தரித்து

3.         முத்துச் சரப்பளி பதைக்கங்களுடனே
            மோகன மாலை வைரத்தாலி அழகும்

4.         கட்டிய இடைதனிலே ஒட்டியாணமும்
            காலிலிடும் பாதரசம் தண்டை கொலுசும்

5.         வைத்திருக்கும் ஜடை பின்னல் மயிர் மாட்டியும்
            வன்மை மிகும் நெற்றிப்புரை யாவும் தரித்து

6.         இவர்கள் இஷ்டர் பந்துக்கள் எல்லாரும் வாழ
            இவர்கள் பெற்றுப் பெருகி என்றும் வாழவே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...