28 June 2018

கரையேறி உமதண்டை


1.       கரையேறி உமதண்டை
            நிற்கும்போது ரட்சகா
            உதவாமல் பலனற்று
            வெட்கப்பட்டுப் போவேனோ

பல்லவி

                        ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
                        வெட்கத்தோடு ஆண்டவா
                        வெறுங்கையனாக உம்மைக்
                        கண்டுகொள்ளல் ஆகுமா?

2.         ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
            வைத்திடாமல் சோம்பலாய்க்
            காலங்கழித்தோர் அந்நாளில்
            துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3.         தேவரீர் கை தாங்க சற்றும்
            சாவுக்கஞ்சிக் கலங்கேன்
            ஆயினும் நான் பெலன் காண
            உழைக்காமற் போயினேன்

4.         வாணாள் எல்லாம் வீணாளாகச்
            சென்று போயிற்றே ஐயோ
            மோசம் போனேன் விட்ட நன்மை
            அழுதாலும் வருமோ?

5.         பக்தரே உற்சாகத்தோடு
            எழும்பிப் பிரகாசிப்பீர்
            ஆத்துமாக்கள் யேசுவண்டை
            வந்துசேர உழைப்பீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...