28 June 2018

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே


பல்லவி

                   பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
                        மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே            

சரணங்கள்

1.         தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்
            இயேசுவில் மாற்றம் பெற்றார்
            மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
            அழைக்கிறார் - ஓடியே வா

2.         தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை
            பெற்றவர் பலருமுண்டு
            இயேசு மகா இராஜன் உன்னைத் தான் அழைக்கிறார்
            நம்பி நீ ஓடியே வா

3.         கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
            கனிவுடன் வேண்டுகிறோம்
            வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
            அழைக்கிறார் - ஓடியே வா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...