கர்த்தனே எம் துணையானீர்


                   கர்த்தனே எம் துணையானீர்
                        நித்தமும் எம் நிழலானீர்
                        கர்த்தனே எம் துணையானீர்

1.         எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
            கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
            மனு மக்களில் இவர் போலுண்டோ
            விண் உலகிலும் இவர் சிறந்தவர்                     - கர்த்தனே

2.         பாவி என்றெனைப் பலர் தள்ளினார்
            ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
            ராஜா உம் அன்பு எனைக் கண்டது
            உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை     - கர்த்தனே

3.         சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
            நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
            கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
            ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை         -கர்த்தனே

4.         ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
            ராஜனே உம்மைப் பாடக் கூடுமோ? (2)
            ஜீவனை உமக்களிக்கின்றேனே
            உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை    - கர்த்தனே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே