28 June 2018

இயேசு மீட்பருந்தன் நெஞ்சில்


1.       இயேசு மீட்பருந்தன் நெஞ்சில்
            வாசம் பண்ணவிடாயோ?
            உந்தன் பாவம் சுமந்தோரை
            இன்று ஏற்றுக் கொள்ளாயோ?

                        இயேசு மகாராஜர் இதோ
                        வாசலண்டை நிற்கிறார்
                        பாவி! நீ இவ்வன்பை எண்ணி
                        வாசலைத் திறக்கப் பார்

2.         பாவம் லோகம் ஆபாசம்
            யாவும் இடம் பெற்றதோ
            நீசச் சிலுவையில் மாண்ட
            நேசர்க் கிடமில்லையோ?

3.         இன்னுமே நீ தாமத்தித்தால்
            பின்பு மோசம் வருமே
            இப்போதே இரட்சண்ய காலம்
            அப்பால் பிந்திப் போகுமே

4.         கூவி நிற்கும் மீட்பர் சத்தம்
            பாவி கேட்டுத் திறப்பாய்
            உந்தன் ஜீவன் பெலன் யாவும்
            இன்றே தத்தம் செய்குவாய்      

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...