கொல்கொதாவே கொலை மரமே


பல்லவி

                   கொல்கொதாவே கொலை மரமே
                        கோர மரணம் பாராய் மனமே                  - கொல்கதா

அனுபல்லவி

                        கோர மனிதர் கொலை செய்தார்
                        கோர காட்சி பார் மனமே           - கொல்கதா

1.         கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார்
            கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
            எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
            எந்தன் ஜீவ நாயகா                              - கொல்கதா

2.         என்னை மீட்ட கொலை மரமே
            அன்னையே நான் என்ன செய்வேன்
            என்னை உமக்கே ஒப்புவித்தேன்
            என்றென்றுமாய் நான் வாழ                     - கொல்கதா

3.         வானம் பூமி ஒன்றாய் இணைந்த
            வல்ல தேவன் உமக்கே சரணம்
            வாடி, வாடி, கொலை மரத்தில்
            நிற்கும் காட்சி பார் மனமே                    - கொல்கதா

4.         அல்லேலூயா, அல்லேலூயா
            அல்லேலூயா, அல்லேலூயா
            அல்லேலூயா, அல்லேலூயா
            அல்லேலூயா, என்றென்றும்                   - கொல்கதா

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே