தூயாதி தூயவரே! உமது புகழை


பல்லவி

 

          தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

அனுபல்லவி

            பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
            உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் - தூயாதி

1.         சீடரின் கால்களைக் கழுவினவர்
            செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே       - பாரில்

2.         மக்களின் நோய்களை நீக்கினவா
            பாவியென் பாவநோய் நீக்கிடுமே            - பாரில்

3.         துயரங்கள் பாரினில் அடைந்தவரே
            துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே - பாரில்

4.         தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
            என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே!            - பாரில்

5.         பரலோகில் இடமுண்டு என்றவரே
            பரிவாக எனக்குமோரிடம் தாருமே        - பாரில்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே