தூயாதி தூயவரே! உமது புகழை
பல்லவி
தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
அனுபல்லவி
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் -
தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - பாரில்
2. மக்களின் நோய்களை நீக்கினவா
பாவியென் பாவநோய் நீக்கிடுமே - பாரில்
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே - பாரில்
4. தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே! - பாரில்
5. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்குமோரிடம் தாருமே - பாரில்
Comments
Post a Comment