27 June 2018

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே


பல்லவி

          எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
            எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

சரணங்கள்

1.         அந்த நாள் மிக சமீபமே
            சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
            தேவ எக்காளம் வானில் முழங்க
            தேவாதி தேவனை சந்திப்போமே

2.         கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
            கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
            பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
            பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

3.         கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
            விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
            கண்ணீர் கவலை அங்கே இல்லை
            கர்த்தர் தாமே வெளிச்சமாவார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...