அப்பா தயாள குணாநந்த மோனந்த

அப்பா தயாள குணாநந்த மோனந்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

92. இராகம்: கெவுளிபந்து                                   அடதாளம்

 

                             கண்ணிகள்

 

1.       அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா

            இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?

 

2.         குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்

            செற்றலர்[1] எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ?

 

3.         கன்னம் அதைத்ததோ?[2] கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி

            மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன்னேமி?[3]

 

4.         மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்

            பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே.

 

5.         என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்

            பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ?

 

6.         இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்

            கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?

 

7.         நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே?-பல

            கார்பட்ட[4] நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே.

 

 

- ஏசுதாசன் அண்ணாவியார்

 

 

YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] பகைவர்

[2] வீங்கியதோ

[3] கருணைக்கடல்

[4] இருளடைந்த-பாவ இருள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்