அப்பனே நீர் எனக்கு எப்படியும் இரங்கி

அப்பனே நீர் எனக்கு எப்படியும் இரங்கி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

188. இராகம்: துசாவந்தி                                    ஆதிதாளம் (432)

 

                             பல்லவி

 

          அப்பனே, நீர் எனக்கு எப்படியும் இரங்கி

          அருளிச் செய்ய வேணும் நல் வகையை;

 

                             அனுபல்லவி

 

            தப்பிக் கெட்ட எனக்காய் ஒப்புடன் ரத்தம் சிந்திச்

            செப்பமுடன் எனை மீட்டநன் மெய்ப்பரனே, கிறிஸ்தரசே - அப்

 

                             சரணங்கள்

 

1.         வஞ்ச வினைக்குட் பட்டேன்; நெஞ்சம் உருகிப் புண்ணாய்

            வாடி லைந்து, பவமதினாலே-தினம்

            சஞ்சலப் பட்டுழன்று, நஞ்சுண்ட கெண்டையைப்போல்

            தயங்கி மயங்கி மிகத் தியங்குவனோ?-ஏழை

            தஞ்சம் எனக்கு நீர் என் கெஞ்சுதலுக்கு இரங்கிப்

            பஞ்ச பவங்களைத் தீர்த்தருள்; மிஞ்சும் கிருபை வழிபாரும், மெய் - அப்

 

2.         நாடிப் பவத்தில் விரைந் தோடி விழுந்து கெட்டு

            நைந்து கரைந்து மனம் மெலிவேனே?-மிக

            வாடித் தவித்த என்னைத் தேடி ரட்சிக்க நீர்தாம்

            வலிய வந்துதிரத்தைச் சொரிந்தீரே;-இப்போ

            பாடிக் கெஞ்சம் எனக்குச் சூடிக் கிருபை அருள்;

            நீடி தயையினைப் புரியும்; கொண்டாடி உமக்கூழியம் செய்ய மெய் - அப்

 

3.         முன்னாள் நீர் ஈந்ததெல்லாம் என்னாலே நான் அழித்து

            முழுவதையும் இழந்து போனேனே,-பாவி

            தன்னாலே கெட்டவன் நான் பின் ஆரிடம் போவேன் நீர்

            தாமே எனக்குப் பிணைப்பட்டீர், ஐயா-தேவ

            மன்னா, மெய் மன்னா ஓசன்னா, க்ருபை செய்யும்;

            இந்நாள் முதல் நான் மகிழ்ந்தினி எந்நாளும் உமக்கூழியம் செய்ய மெய் - அப்

 

 

- மரியான் உபதேசியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்