அப்பனே நீர் எனக்கு எப்படியும் இரங்கி
188. இராகம்: துசாவந்தி ஆதிதாளம் (432)
பல்லவி
அப்பனே, நீர்
எனக்கு எப்படியும் இரங்கி
அருளிச் செய்ய
வேணும் நல் வகையை;
அனுபல்லவி
தப்பிக் கெட்ட
எனக்காய் ஒப்புடன் ரத்தம் சிந்திச்
செப்பமுடன்
எனை மீட்டநன் மெய்ப்பரனே, கிறிஸ்தரசே - அப்
சரணங்கள்
1. வஞ்ச வினைக்குட் பட்டேன்; நெஞ்சம் உருகிப் புண்ணாய்
வாடி லைந்து,
பவமதினாலே-தினம்
சஞ்சலப் பட்டுழன்று, நஞ்சுண்ட கெண்டையைப்போல்
தயங்கி மயங்கி
மிகத் தியங்குவனோ?-ஏழை
தஞ்சம் எனக்கு நீர் என் கெஞ்சுதலுக்கு இரங்கிப்
பஞ்ச பவங்களைத்
தீர்த்தருள்; மிஞ்சும் கிருபை வழிபாரும்,
மெய் - அப்
2. நாடிப் பவத்தில்
விரைந் தோடி விழுந்து கெட்டு
நைந்து கரைந்து மனம் மெலிவேனே?-மிக
வாடித் தவித்த
என்னைத் தேடி ரட்சிக்க நீர்தாம்
வலிய வந்துதிரத்தைச்
சொரிந்தீரே;-இப்போ
பாடிக் கெஞ்சம்
எனக்குச் சூடிக் கிருபை அருள்;
நீடி தயையினைப் புரியும்; கொண்டாடி உமக்கூழியம்
செய்ய மெய் - அப்
3. முன்னாள் நீர் ஈந்ததெல்லாம்
என்னாலே நான் அழித்து
முழுவதையும் இழந்து போனேனே,-பாவி
தன்னாலே கெட்டவன்
நான் பின் ஆரிடம் போவேன் நீர்
தாமே எனக்குப் பிணைப்பட்டீர்,
ஐயா-தேவ
மன்னா, மெய் மன்னா ஓசன்னா, க்ருபை செய்யும்;
இந்நாள் முதல் நான் மகிழ்ந்தினி எந்நாளும் உமக்கூழியம்
செய்ய மெய் - அப்
- மரியான் உபதேசியார்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment