பக்தியாய் ஜெபம் பண்ணவே
489. இராகம்: தேசிகதோடி சாபு தாளம்
1. பக்தியாய் ஜெபம் பண்ணவே சுத்தமாய்த்
தெரியாதய்யா!
புத்தியோடுமைப்
போற்ற, நல் சித்தம் ஈந்திடும், யேசுவே!
2. பாவ பாதையைவிட்டு
நான் ஜீவ பாதையில் சேர, நல்
ஆவி தந்தெனை
ஆட்கொளும், தேவ தேவ குமாரனே!
3. சிறுவன் நானுனைச்
செவ்வையாய் அறியவும், முழு அன்பினால்
நிறையுமுள்ள
நிலைக்கவும் இறைவனே! வரம் ஈகுவாய்.
- எச்.எ. கிருஷ்ண பிள்ளை
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment