பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் முன்னணையில்
பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் முன்னணையில்
தூதர் சேனை சூழ்ந்திருக்க
பிறந்திட்டாரு நம் பாலன் - (2)
வந்தாரு வந்தாரு வந்தாரு பாலனாக
வந்தாரு
தந்தாரு தந்தாரு தந்தாரு மீட்பை
நமக்கு தந்தாரு - 2
1. நட்சத்திரம் வழிகாட்டவே
ஆயர் மூவரும் வந்தனரே
சாஸ்திரிகள் பரிசோடு
பாலனை பணிந்து சென்றனரே - (2) - வந்தாரு
2. தீர்க்கத்தரிசனம் நிறைவேறிட்டு
யூத ராஜா வந்திட்டாரு
எல்லோருமே கதிகலங்க
வந்திட்டாரு நம் ராஜா - (2) - வந்தாரு
3. நம்மை மீட்க வந்திட்டாரு
சாத்தானை ஜெயிக்க பிறந்திட்டாரு
உன்னையும் என்னையும் காத்திடவே
உதிச்சிட்டாரு நம் பாலன் - (2) - வந்தாரு
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment