அப்பா
இயேசு என்னோடு பேசினால் - எனக்கு
அளவிடமுடியாத சந்தோஷம்
அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்
- அப்பா இயேசு
1. மகனே என்று நீ கூப்பிடும் போது
மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா
கண்மணி போல் என்னைக் காத்தவரே
காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன் -
அப்பா இயேசு
2. என்று நீரும் வருவீரய்யா
எப்போது உம்மை நான் காண்பேனய்யா
எந்தன் உள்ளம் புதுக்கவியால்
எப்போதும் உம்மை நான் பாடுமய்யா - அப்பா
இயேசு
No comments:
Post a Comment