அபிஷேகஞ் செய்துவைத்தாரே குருமார் கூடி

அபிஷேகஞ் செய்துவைத்தாரே குருமார் கூடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

288. இராகம்: அசாவேரி                                     ரூபகதாளம் (460)

 

                             பல்லவி

 

          அபிஷேகஞ் செய்துவைத்தாரே-குருமார் கூடி;

          அன்பு கொண்டாடினாரே

 

                             அனுபல்லவி

 

            ஜெபதப சிந்தையார-அபசாரம்[1] யாதுந் தீர

            தேவதூதர்கள் பாட,-கோவிலிற் பலர் கூட - அபி

 

                             சரணங்கள்

 

1.         திரள், திரளாகச் சேர்ந்த-ஜனங்கள் கண்டுமகிழத்

            திவ்யவா[2] ரணமுறைச்-செயல்கள்-பல நிகழ

            அருளணி யன்பமைந்தோர்-அருகினின்று புகழ

            அஞ்ஞான திமிரம்போக்[3]-கருண[4] னீயாவையென்று - அபி

 

2.         ஆன மந்தையை மேய்க்கும்-அருளார் கோனானீயாவை

            அகிலத்தாரேற்றிப் போற்றும்-அழகிய தீபம்போல் வை

            வானமிருந்துவரு-மாவி வதிய வாழ்வை

            மாசணுகாத வாசீர்-வாதம் பெறுவை யென்று - அபி

 

3.         வலக்கரங் கொருந்துநன்-மந்தையை வொப்படைத்து

            வகைவகை செய்கடமை-வகுத்து வகுத்துரைத்து

            கலக்கமில் லாமலதைக்-காத்துப் புன்மேய்ச்சல் காட்டி,

            காலந்தோறுஞ் சுனைநீர்-காதலா[5] யூட்டென்று - அபி

 

4.         அன்பார் நாயகியுடன்-அன்யோன்யமாக வாழும்

            ஆசை நாயகன்போல, அங்கத்தாருடன் சேர்ந்து

            துன்பம் நெருங்கி யென்ன-துயரம் வளைந்துமென்ன

            துன்னு சரடூசிபோற்-றுலங்க வாழ்த்தியென்று - அபி

 

5.         கரங்கள் சிரத்தில் வைத்து-கண்ணிலானந்த பாஷ்பம்[6]

            கசிந்து வழியநின்று; கர்த்தர் விப் பத்தற்கின்று[7]

            சுரந்தாவி மழைபோலச்-சொரியுஞ் சொரியுமென்று

            சோபனஞ் சொல்லித்தேற்றி; தொடர்பாய்ப் பிரார்த்தித் தேற்றி - அபி

 

 

- ஜே.ஆர். அர்னால்ட்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] தீயநடை

[2] வேதம்

[3] இருள்

[4] சூரியன்

[5] அன்பாய்

[6] கண்ணீர்

[7] பக்தர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்