பரிசுத்தாவி நீர் வாரும் திடப்
462. இராகம்: யமுனாகல்யாணி ஆதி தாளம்
பல்லவி
பரிசுத்தாவி
நீர் வாரும்!-திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று
அனுபல்லவி
அருளினைப்
பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி
சரணங்கள்
1. செயல்குண வசனத் தீதுகள் போக,
திருச்சபை யதிலிவர் பூரணராக,
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,
ஜெபதப தியானஞ் செய்வதற்காக. - பரி
2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,
நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,
சகல தீதான பேதங்களும் நீங்க. - பரி
3. தினமறை யோதி ஜெபித்து மன்றாட,
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட,
உணர்வோடு தொழுது கீதங்கள் பாட
உள்ளந் திருந்து ஜீவாறுகளோட. - பரி
- அருள்திரு. ச.பே.
ஞானமணி
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment