கடைசி நாட்களிலே
கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவனவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார்
- அருள் - 2
1. பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க - 2
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார் - இன்று -
2
2. தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம் - 2
பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனைக் கண்டிட - பின் - 2
3. முழங்காலில் நின்றோரெல்லாம்
முழங்கிடுவார் அன்று - 2
முழந்தாள்கள் மடங்கும் இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பிவிடும் - பணித் - 2
4. இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம் - 2
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிடும் - தம்மை - 2
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment