பவனி இதோ செல்கின்றார் பார்
155. இராகம்: தீரசங்கராபரணம். தாளம்: ஆதி.
பல்லவி
பவனி
இதோ செல்கின்றார் பார்
பார்த்திபனார்
எருசலேமுக்கு.
அனுபல்லவி
பவனி யிதோ
செல்கிறதைப்
பார்த்திடுவோம்
பாலர்களே - பவனி
1. தேவனுடைய செல்வப் பாலன்
சீவனுள்ள தேவ
மைந்தன்
தேவ தூதர் சேனை விட்டார்
பூவில் வந்து பாடு பட்டார் - பவனி
2. தாசன் தீர்க்கன் சகரியா
தானுரைத்த சொற்படியே
பாசமா யோர் மறிமே லேறி
நேசமாய் நம் இயேசு ராசா - பவனி
3. முன்னணியும் பின்னணியும்
முழங்குதே ஓசன்னா
வென்று
மன்னவனார் மேன்மையுடன்
மவுனமாகப் போகிறாரே - பவனி
4. வழிதனிலே மரக் கிளைகள்
வஸ்திரங்கள்
விரித்திருக்க
பதியிலுள்ள
பரிசேயர்கள்
அதிபதிகள் அதிர
மிக - பவனி
5. சீயோன் நகர் திகிலடைய
சிறுவர் கூட்டம் துதி முழங்க
பெரிய துரை போகிறாரே
அருகிலுள்ளோர்
அதிசயிக்க - பவனி
6. குருத்தோலைக் கொடி
பிடித்து
குழந்தைகள் கீதம் பாட
குருவேசு நாதரதோ
கும்பலோடு போகிறாரே - பவனி
Comments
Post a Comment