காருண்யம் என்னும் கேடயத்தால்
காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக் கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசிர்வதிக்கின்றீர் - 2
எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
- 2
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் -
2 - காருண்யம்
1. நம்பும் மனிதர் சந்தோசமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் - உம்மை - 2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் - 2 - எதிர்கால
2. தெரிந்துக் கொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துக் கொண்டேன் - 2
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக் கொண்டேன் - 2
- எதிர்கால
3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே - 2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் - 2 - எதிர்கால
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment