பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த
பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த
அன்புள்ள எம் தயாபராவே
பற்றோடு
உம் பாதத்தண்டையில்
பணிந்து உம்மைத் துதி செய்கின்றோம்
இயேசுவே எங்கள்
தேவனே
வல்லமையின் மகிமையின்
ராஜனே
நன்றியோடும்மைத் துதிக்கின்றோம் - (2)
1. சோதனை வேதனை நேரத்தில்
எம் கண்ணீர் துடைத்தீரே
உம் அன்பின் கரத்தினாலே
அரவணைத்
தெம்மைக் காத்தீரே - இயேசுவே எங்கள்
2. இப்புதிய ஆண்டதனில்
பக்கத்துணையாய்
எம்மருகில்
சுக சந்தோஷ
சமாதானத்தை
ஈந்தெமக்கு
ஆசீர்வதியும் - இயேசுவே எங்கள்
Comments
Post a Comment