பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
பள்ளங்களெல்லாம்
நிரம்பிட வேண்டும்
மலைகள்
குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும் - 2
ராஜா
வருகிறார் ஆயத்தமாவோம் - (2)
இயேசு
வருகிறார் எதிர் கொண்டு செல்வோம் - (2) - பள்ளங்களெல்லாம்
1. நல்ல
கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்
- 2 - ராஜா
2. கோதுமையைப்
பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே - 2 - ராஜா
3. அந்நாளில்
வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம்
எரிந்து உருகிப் போகும் - 2 - ராஜா
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய்
வாழ்ந்து முன்னேறுவோம் - 2 - ராஜா
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் - 2 - ராஜா
- Father S.J. Berchmans
YouTube Link
Comments
Post a Comment