பாடியே பரனை துதி மனமே
பல்லவி
பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி
துதி தினமே - (2)
சரணங்கள்
1. சென்ற
நாளெல்லாம் கருத்துடன்
காத்த
நாதனை துதி மனமே
நாளுக்கு
நாளாய் செய்பல
நன்மைக்காய்
நாதனை துதி மனமே
ஆதரவாய்
எம்மை காத்ததினாலே
தேவனை
துதி மனமே - பாடியே
2. நானிலந்தனிலெம்
பாவங்கள் போக்கிய
நாதனை
துதி மனமே
என்றும்
எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை
துதி மனமே
கானகமதிலே
ஜீவ ஊற்றான
தேவனை
துதி மனமே - பாடியே
3. கிருபையால்
ஈந்த திருப்பலிக்காக
நாதனை
துதி மனமே
கோரமாய்
வந்த நோய்களை
தீர்த்ததால்
நாதனை துதி மனமே
தாபரமாய்
எம்மை தாங்கியதாலே
தேவனை
துதி மனமே - பாடியே
4. கஷ்டமானாலும்
நஷ்டமானாலும்
நாதனை
துதி மனமே
பஞ்சம்
பசியுடன் பங்கம் வந்தாலும்
நாதனைத்
துதி மனமே
ஜீவனானாலும்
மரணமானாலும்
தேவனைத்
துதி மனமே - பாடியே
5. ஏகமாய்
எம்மை அன்பினால்
இணைத்த
நாதனைத் துதி மனமே
அகமதை
ஆவியால் ஆலயமாக்கிய
நாதனைத்
துதி மனமே
தூதரிலும்
எமை மேன்மையாய்
எண்ணிய
தேவனைத் துதி மனமே - பாடியே
Comments
Post a Comment