பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்
102. இராகம்: கேதாரகௌளம். ரூபகதாளம்
பல்லவி
பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்
பாருங்கள் பாவையரே.
அனுபல்லவி
காதகன்
பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க
விண்ணைக்
காட்டும் கல்வாரிமலைக் கோட்டில்[1] நம்
பிணையாளி - பாதகர்
சரணங்கள்
1. பக்தர் பெருமான் இரு கைத்தலம்
விரிக்கிறார்,
பாவியைப் போல் வாதை மேவி உத்தரிக்கிறார்[2];
பெத்தம்[3] உளமனத்தார் கத்திக்கொக் கரிக்கிறார்,
பேதை மரி தன்மார்பில் மோதி ஆகுலிக்கிறார். -
பாதகர்
2. கள்ளர், கயவர்பலர்
துள்ளித் தூஷணிக்கிறார்,
காடி கலந்தகடற் காளானைத் திணிக்கிறார்;
வள்ளல் செவியுளைக்கும்
வார்த்தைகள் பிணைக்கிறார்,
மாறுபா டுள்ள ரபி[4] மார்புறக்
கணிக்கிறார். - பாதகர்
3. கைவிட்ட தெனவென்று
கலங்கிநின் றழுகிறார்,
காயுநின் மலன்கோபத் தீயினில் முழுகிறார்,
மையுற்ற[5] கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்;
வானோர் அரசன்
ஏழு வாக்கிய மொழிகிறார். - பாதகர்
4. மாலுற்ற[6] திருவுடல் கீலற்று[7] நழுவுதே,
மாற்றல[8] ரிற்கொடிய கூற்றுயிர்[9] பிழியுதே,
பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,
பாணியும்[10] குருதியும்
தோணியே வழியுதே. - பாதகர்
- மறைத்திரு. எ.ஜ. குளோரியா
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment