பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்

பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

102. இராகம்: கேதாரகௌளம்.                             ரூபகதாளம்

 

                             பல்லவி

 

                   பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்

                        பாருங்கள் பாவையரே.

 

                             அனுபல்லவி

 

                        காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்

                        காட்டும் கல்வாரிமலைக் கோட்டில்[1] நம் பிணையாளி - பாதகர்

 

                             சரணங்கள்

 

1.         பக்தர் பெருமான் இரு கைத்தலம் விரிக்கிறார்,

            பாவியைப் போல் வாதை மேவி உத்தரிக்கிறார்[2];

            பெத்தம்[3] உளமனத்தார் கத்திக்கொக் கரிக்கிறார்,

            பேதை மரி தன்மார்பில் மோதி ஆகுலிக்கிறார். - பாதகர்

 

2.         கள்ளர், கயவர்பலர் துள்ளித் தூஷணிக்கிறார்,

            காடி கலந்தகடற் காளானைத் திணிக்கிறார்;

            வள்ளல் செவியுளைக்கும் வார்த்தைகள் பிணைக்கிறார்,

            மாறுபா டுள்ள ரபி[4] மார்புறக் கணிக்கிறார். - பாதகர்

 

3.         கைவிட்ட தெனவென்று கலங்கிநின் றழுகிறார்,

            காயுநின் மலன்கோபத் தீயினில் முழுகிறார்,

            மையுற்ற[5] கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்;

            வானோர் அரசன் ஏழு வாக்கிய மொழிகிறார். - பாதகர்

 

4.         மாலுற்ற[6] திருவுடல் கீலற்று[7] நழுவுதே,

            மாற்றல[8] ரிற்கொடிய கூற்றுயிர்[9] பிழியுதே,

            பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,

            பாணியும்[10] குருதியும் தோணியே வழியுதே. - பாதகர்

 

 

- மறைத்திரு. எ.ஜ. குளோரியா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] சிகரம்

[2] சகிக்கிறார்

[3] பாசம்

[4] ஆசாரியர்

[5] குற்றம்

[6] மயக்கம்

[7] பிடியற்று

[8] பகைவர்

[9] சொல்

[10] தண்ணீர்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே