அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டு
இன்பமாக அவர் பாதையோடே -
2
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே
- (2)
1. துன்பப்பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே - 2
கண்விழிப்போல் நான் காத்திடுவேன் என்றனரே
- (2)
2. முட்செடிப்போல பற்றிடுமே
மோசம் அடையாய் நீ முற்றிலுமே - 2
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
- (2)
3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும் - 2
ஆ நேசரே தம் இன்ப சத்தம் ஈந்திடுவார்
- (2)
4. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்பு - 2
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே எந்நேசரே
- (2)
No comments:
Post a Comment