அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டு
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டு
இன்பமாக அவர் பாதையோடே - 2
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே - (2)
1. துன்பப்பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே - 2
கண்விழிப்போல்
நான் காத்திடுவேன் என்றனரே - (2)
2. முட்செடிப்போல
பற்றிடுமே
மோசம் அடையாய் நீ முற்றிலுமே - 2
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
- (2)
3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும் - 2
ஆ நேசரே தம் இன்ப சத்தம் ஈந்திடுவார்
- (2)
4. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும்
இம்மாந்தர் அன்பு - 2
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே எந்நேசரே - (2)
YouTube Link
Comments
Post a Comment