பனி துளி போல் பொழிகிறதே

பனி துளி போல் பொழிகிறதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பனி துளி போல் பொழிகிறதே தேவனின் அபிஷேகம்

            பின் மாரியின் மழை பொழியும் காலம் வந்ததே - 2

 

                        ஒரு மனதோடு சபையாரெல்லாம்

                        ஒன்று கூடுங்கள் (ஊழியரெல்லாம்)

                        கர்த்தர் பெரிய காரியம் செய்யும்

                        வேளை வந்ததே - (2)

 

1.         தலை குனிந்து வாழ்ந்தது போதும் தலையை உயர்த்திடு

            சிங்கத்தைப் போல் கெர்ச்சித்து எதிரியை துரத்திடு - 2

            எங்கும் தேவனை தொழுது கொள்ளும் காலம் வந்ததே - (2)

            எழுப்புதல் அடைந்து இயேசுவின் நாமத்தை

            என்றும் உயர்த்துவோம்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2

 

2.         கோலியாத்தின் சத்தம் கேட்டு பயந்து போகாதே

            உனக்குள் இருக்கும் தேவனை நீ மறந்து போகாதே - 2

            விசுவாசமென்னும் கேடகத்தாலே ஜெயத்தை பெற்றிடு - (2)

            சத்துருவை உன் காலின் கீழே மிதித்து எறிந்திடு - (2)

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2

 

3.         உலகத்தை கலக்கும் தேவமனிதராய் தெரிந்து கொண்டாரே

            இருபுறமும் கருக்குள்ள பட்டயம் நமக்கு தந்தாரே - 2

            சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்து செல்லுவோம் - (2)

            சத்துரு மேல் கொடியை ஏற்றி தேசத்தை சுதந்தரிப்போம் - (2)

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2

 

 

- Pastor Lucas Sekar

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்