பளிங்கு நதியோரம் பரமனை தேடிடுவேன்
பளிங்கு
நதியோரம் பரமனை தேடிடுவேன்
கனிதரும்
வாழ்க்கை என்னில் உண்டு
கர்த்தரை நாடிடுவேன்
1. ஜீவ விருட்சமாய்
என்னை நோக்கினார்
ஜீவனிலே நான்
செழித்தோங்க
பாவ வாழ்க்கையை மறக்கும் நாளில்
பாராளும் தேவன்
என் பரவசமே
2. ஒளி வீச என்னை அழைத்த தேவன்
கலங்கரை விளக்காய் மாற்றிடுவார்
ஒளியின் கதிராய்
பிரகாசிப்பேன் நான்
ஒளியின் காட்சியாய்
வாழ்ந்திடுவேன்
3. மந்தையை மேய்த்திடும்
அழைப்பு தந்தார்
மணவாட்டி சபையாய்
மாறிடவே
மறந்திடுவேனோ
தேவ அழைப்பை
மறுரூபமாகும்
நாள் வரையில்
Comments
Post a Comment