பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும் - 2
ஆகையால்
துதித்திடு
ஊக்கமாய்
ஜெபித்திடு
வசனம்
பிடித்திடு
பயத்தை
விடுத்திடு - பெலத்தினால்
1. அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ
நம் தேவனின் பெலனல்லவா - ஆகையால்
2. கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது
நம் தேவனால் முடிந்திடுமே - ஆகையால்
3. இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை - ஆகையால்
4. அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
இரட்சிப்பது தடையுமல்ல
நம் தேவனுக்கு தடையுமில்லை - ஆகையால்
- RAVI BHARATH
Comments
Post a Comment