பஜனைசெய் மனமே மேசியா
276.
இராகம்: உசேனி ரூபகதாளம் (454)
பல்லவி
பஜனைசெய், மனமே;
மேசியா
பஜனைசெய்,
மனமே; தினம், தினம்.
அனுபல்லவி
நிஜ மனதுடன் குரு ஏசு நாமம்
நினை,
நல்ல சுகத்தைக் கொடுக்கும்; - பஜனை
சரணங்கள்
1. பாச
வினை யெல்லாம் போக்கும்;-திவ்ய
பாதமலர்க் கதி சேர்க்கும்;-மகா
தோஷமென்பதையும் நீக்கும்;-பரி
சுத்த
இருதயமாக்கும்; - பஜனை
2. துன்பம்
கவலைகள் நீங்கும்; மனம்
சோர்பு கொள்ளாமலே தாங்கும்;-தேவ
அன்பும்
சுசீலமும் ஓங்கும்;-இருள்
அந்தகாரம்
வெளி வாங்கும்; - பஜனை
3. ஆசாபாசந் தனை அறுக்கும்;-பொல்லா
ஆணவ
மென்பதை நொறுக்கும்-இந்த
நீச உலகத்தை வெறுக்கும்-வீண்
நினைவு
கொள்ளாம லுறுக்கும்[1]; -
பஜனை
4. மனதை
யோர் வழி கூட்டும்; சன்
மார்க்க
நெறியில் ஓட்டும்;-அது
தினம்
மகிமையைக் காட்டும்;-நித்ய
ஜீவ
முடியங்கு சூட்டும்; - பஜனை
- ஈசாக்கு பாக்கியநாதன்
Comments
Post a Comment