பாணிக்ரகணஞ் செய்யும் இருபேருக்கும்
308.
இராகம்: ஆனந்தபைரவி ஆதி
தாளம் (469)
பல்லவி
பாணிக்ரகணஞ்
செய்யும்-இருபேருக்கும்,
பரனே,
கிருபை செய்யும்.
அனுபல்லவி
மாணப் பெரிய வேதவாசக விதிகொண்டு
வந்தார்,
தெய்வாலயம் புரிந்தா ரடித்தொண்டு - பாணி
சரணங்கள்
1. அன்றாத மேவை சீராய்-ஏகாந்தமாக
அன்போ
டிசைந்த நேராய்,
துன்றி யபிராஞ் சாராய்-மனோகர
சுத்த
இதயத்தோராய்
மன்றல்
செய்வா ருவந்து-வைக இவர் பால்
வந்து
வாக்குத் தத்தம் நினைந்து வரப்பிரசாதந் தந் - பாணி
2. கானா விவாகம் நாடி-சிந்தை மகிழ்ந்து
கரிசனையாய்க் கொண்டாடிப்
போனீ ராறு கற்சாடி-நிறைந்த
ரசம்
புரிந்தீ ரங்குறவாடி
கோனே! யின்றுமைத் தெடி-கோயிற் புகுந்தார் தேடி
குழைந்துந்தன் துதிபாடி-கூடி மாங்கில்யஞ்சூடி
- பாணி
3. திருச்சபை
மனையாட்டி-அன்பே, புறாவே
செல்வமே
யென்று பாராட்டி,
வரச்சொல்லி,
நேசங்காட்டி-உன்னதகீத
வாக்கு
வர்ணனை கூட்டி
உரைக்குமது மெய்ஞ்ஞான-மணவாளா, உவமானம்,
உவமேயமிது நிதானம்;-வேணுநின் சமாதானம் - பாணி
- சு.ச. ஏரேமியா,
தெல்லிவினை, இலங்கை.
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment