30 May 2019

அனுபந்தம் - கிறிஸ்தவ கீர்த்தனைகள்


விடுபட்ட பாடல்கள்

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

பாடல் பா.எண்
அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை 022
அருட் பெரும் சோதி நீ அடியேனை 028
அல்லேலூயா என்றுமே அவருடைய 025
அன்பர்க்கருள் புரிவோனை 006
ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் 001
இசையா பிளவுண்ட மலையே 013
இதோ அடியேனிருக்கிறேன் 015
இயேசுநாதனே இரங்கும் என் ஏசு நாதனே 010
உலகும் வானும் செய்தாளும் 029
உன்னதமானவர் சன்னிதி மறைவில் 020
எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா 011
என்னபாக்கியம் அம்மா ஏகனருள் 016
கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் 024
கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம் 021
கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் 018
கொலைக்காவனம் போறார் 005
சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் 004
சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார் 002
சேவித்துக் கொண்டேன் ஐயா 014
சொல்லிவந்துன் பாதம் புல்லினேன் 027
தூயர் தூயர் தூயரெனத் தூதர் தினம் 026
தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன் 007
பரம சேனை கொண்டாடினார் 003
பரலோக தந்தாய்! நின்னாமம் 030
பரனே பரம் பரனேபரப் பொருளே 009
பின்செல்வேன் என் மீட்பரே 012
பூமியின் நற்குடிகளே கர்த்தரை 023
வாரும் தேற்றரவரே வாரும் 008
வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் 019
விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது 017

பரலோக தந்தாய் நின்னாமம்


30.

கரகரபிரியை         ஆண்டவர் பிரார்த்தனை           ஆதிதாளம்

1.         பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி
            பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்
            வரவே, நினது திருவுளச் சித்தமே
            பரமதில் போலிங்கும் துலங்கிடவே.

2.         அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம்
            அயலார் செய்பிழை பொறுப்பதுபோல்,
            இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே
            நன்றருள்வாய் நரபரிபாலா!

3.         சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு
            தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்;
            நீதா, ராஜ்யம் வல்லப மகிமை
            நினைக்கே யுரிய எக்காலமுமே!

உலகும் வானும் செய்தாளும்


29. (33T)     

சங்கராபரணம்            விசுவாசப் பிரமாணம்        ஏகதாளம்

1.         உலகும் வானும் செய்தாளும்
            ஒப்பில் சர்வ வல்லவராய்
            இலகும் அருளும் தந்தையாம்
            எம்பிரான் றனை நம்புகிறேன்.

2.         அவர் ஒரு வேறா மைந்தனுமாய்
            ஆதி முதல் எங் கர்த்தனுமாய்த்
            தவறில் யேசுக் கிறிஸ்துவையும்
            சந்ததமே யான் நம்புகிறேன்.

3.         பரிசுத்தாவி அருளதனால்
            படி மேல் கன்னி மரியிடமாய்
            உருவாய் நரர் அவதாரமாய்
            உதித்தார் எனவும் நம்புகிறேன்.

4.         பொந்து பிலாத்ததிபதி நாளில்
            புகலரு பாடுகளை யேற்று,
            உந்தும் சிலுவையிலறையுண்டு
            உயிர் விட்டாரென நம்புகிறேன்.

5.         இறந்தே அடங்கிப் பாதாளம்
            இறங்கி மூன்றாம் தினமதிலே
            இறந்தோரிடம் நின்றே உயிரோ
            டெழுந்தா ரெனவும் நம்புகிறேன்.

6.         சந்தத மோட்சம் எழுந்தருளிச்
            சர்வ வல்ல பரனான
            எந்தை தன் வல பாரிசமே
            இருக்கின்றாரென நம்புகிறேன்.

7.         உயிருள்ளோரை மரித்தோரை
            உத்தம நியாயந்தீர்த்திடவே,
            ஜெயமாய்த்திரும்ப வருவாரெனச்
            சிந்தையார நம்புகிறேன்.

8.         பரிசுத்தாவியை நம்புகிறேன்,
            பரிசுத்தமா பொதுச்சபையும்,
            பரிசுத்தர்களின் ஐக்கியமும்,
            பரிவாய் உண்டென நம்புகிறேன்.

9.         பாவ மன்னிப்புள தெனவும்,
            மரித்தோர் உயிர்த்தெழுவா ரெனவும்,
            ஓவா நித்திய ஜீவனுமே
            உளதெனவும் யான் நம்புகிறேன்.

- ஜ. ச. வே.


அருட் பெரும் சோதி நீ அடியேனை

அனுபந்தம்:28

To Download Txt Lyrics file

 

28. (13 Y)    உன் திருவரம் தருவாயே

 

சுத்தசாவேரி                                        ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்

            திருவரம் தருவாயே.

 

                             அனுபல்லவி

 

                   மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே

                        அருள் தந்து காப்பாயே. - அருட்

 

                             சரணங்கள்

 

1.         அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,

            தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,

            செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,

            புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. - அருட்

 

2.         வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,

            புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,

            மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,

            என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ. - அருட்

 

3.         இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,

            புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,

            முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,

            பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி நீ. - அருட்

 

 

- ஈ. த. யே.

சொல்லிவந்துன் பாதம் புல்லினேன்


27. (197 Y)   உன் பாதம் புல்லினேன்

ஆனந்தபைரவி                                              ஆதி தாளம்
பல்லவி
          சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும்
          தூரமாகாதாள்வாய், நேசனே.

அனுபல்லவி
            எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து
            கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. - சொல்

சரணங்கள்
1.         இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால்
            இறையோனே காதில் நுழையாதோ?
            திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி
            சேர்க்க என்றனை அழையாயோ?
            அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்;
            விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். - சொல்

2.         சந்ததம் உனையே நம்பினேன்,-சத்துருப்பேயின்
            சற்பனையால் மனம் வெம்பினேன்.
            சொந்தம் நான் உனக்கியம்பினேன்,-நினைக்காணாதே
            துக்கமே விடத்ததும்பினேன்.
            பந்தமாமெ வையும் மாளப் பற்றெலாமுன் பாதத்தேறச்
            சிந்தை உன்னருளே வீறச் சீவன் முத்தி சேர்ந்தே யாறச் - சொல்

3.         ஆரிடத்தென் குறை சொல்லுவேன்-ஈசா. வேறே
            ஆரைத் தஞ்சமாகப் புல்லுவேன்?
            சேரிடத் தெவ்விதம் சொல்லுவேன்?-முப்பகை செய்யும்
            தீமையை எப்படிச் சொல்லுவேன்?
            பாரிடத்து வந்த பாதா, பாக்ய வேதவாக்ய போதா,
            சீரனைத் தினுக்கு மேதா, திவ்விய சற்குரு நாதா. - சொல்

தூயர் தூயர் தூயரெனத் தூதர் தினம்


26. (26 Y)    தேவனைத் துதிப்போமே

தேசிகத்தோடி                                               ஆதிதாளம்
பல்லவி
தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி
சுத்தரான தேவனைத் துதிப்போமே.

சரணங்கள்
1.         நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,
            நீசரைத் தேவ புத்திரராக்கவும்,
            நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. - தூயர்

2.         நீடிக தயை யுடன் நீசரை
            நித்தம் பரிபாலிக்கும் நேசரை
            நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். - தூயர்

3.         அடியார் பிழை பொறுத்தன்புடன்
            ஆதரித்தாரே மிக இன்புடன்;
            அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். - தூயர்

4.         அந்தமும் ஆதியு மின்றியே,
            அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,
            அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். - தூயர்

- ல. வ. கி.

அல்லேலூயா என்றுமே அவருடைய


25. (56 T)

பியாகு                             150-ம் சங்கீதம்                ஏகதாளம்

1.         அல்லேலூயா என்றுமே அவருடைய
            பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,
            என்றும் அவரைத்துதியுங்கள்.
            வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து
            வல்லமை நிறைந்த கிரியைக்காக
            அல்லேலூயா அல்லேலூயா.

2.         மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
            எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,
            என்றும் அவரைத்துதியுங்கள்.
            வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்
            யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்
            அல்லேலூயா அல்லேலூயா

3.         பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
            இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.
            என்றும் அவரைத் துதியுங்கள்.
            சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,
            சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.
            அல்லேலூயா அல்லேலூயா

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...