பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய

பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

347. இராகம்: துசாவந்தி                                              ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                        பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய

                        பாக்கியம் மிகப் பெருகுமே.

 

                             அனுபல்லவி

                        பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச்

                        சிரத்திலே அணிய, யேசு

                        தேவனைப் பணிந்து போற்றுவோம். - பரத்

 

                             சரணங்கள்

 

1.         வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும்

            மனத்துயர், இரவு சாபம் இல்லை;

            அருணன், மதிவேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும்

            அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை;

            சருவ மகிமையுடைய தந்தை

            பரனொடு கிறிஸ்தின் திரு

            அருள் மிகச் சிறந்த ஒளி

            தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே - பரத்

 

2.         பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்;-பேர் ஒளி துலங்கும்

            பரம கிருபாசனத்தைச் சூழலாம்;

            சங்கை யோ டரசிருந்தே ஆளலாம்;-பராபரன் தன்

            சமூக ப்ரபைதனிலே வாழலாம்;

            மங்கை சீயோன் மகளின் பிரிய

            மன்னவன் தேவாட்டுக் குட்டியின்

            இங்கிதக் கல்யாணப் பந்தியின்

            இருந்து நித்ய விருந்தால் மகிழலாம். - பரத்

 

 

- மரியான் உபதேசியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்