பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய
347. இராகம்: துசாவந்தி ஆதி
தாளம்
பல்லவி
பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய
பாக்கியம் மிகப் பெருகுமே.
அனுபல்லவி
பரத்திலே
சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச்
சிரத்திலே
அணிய, யேசு
தேவனைப் பணிந்து போற்றுவோம்.
- பரத்
சரணங்கள்
1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும்
மனத்துயர், இரவு சாபம் இல்லை;
அருணன், மதிவேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும்
அசுத்தர் வந்து
சேர்வதும் இல்லை;
சருவ மகிமையுடைய தந்தை
பரனொடு கிறிஸ்தின் திரு
அருள் மிகச் சிறந்த ஒளி
தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே - பரத்
2. பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்;-பேர் ஒளி
துலங்கும்
பரம கிருபாசனத்தைச்
சூழலாம்;
சங்கை யோ டரசிருந்தே ஆளலாம்;-பராபரன் தன்
சமூக ப்ரபைதனிலே
வாழலாம்;
மங்கை சீயோன் மகளின் பிரிய
மன்னவன் தேவாட்டுக்
குட்டியின்
இங்கிதக் கல்யாணப் பந்தியின்
இருந்து நித்ய
விருந்தால் மகிழலாம். - பரத்
- மரியான் உபதேசியார்
Comments
Post a Comment