பரலோக மன்னா தினம் தாரும் தேவா
பரலோக
மன்னா தினம் தாரும் தேவா
இறைவா எந்தன் இயேசு நாதா
1. அதிகாலை பொழுதில் துதி பாடல் பாடி
காத்திருப்பேன் உந்தன் பிரசன்னம் நாடி
என் வேண்டல் கேட்டு பலர் வாழ்வு மாற
இயேசுவே உந்தன் கிருபை காட்டும்
2. உம் வேத வார்த்தை என் ஜீவ அப்பம்
தேனிலும் இனிதென்று தேடியே வந்தேன்
தேடும் என் வாஞ்சை தேவா அறிந்து
வார்த்தையின் வடிவில் தரிசனம் தாரும்
3. நின் தூய ரத்தம் அன்பின் பிரவாகம்
என் தாகம் தீர்க்க எழுந்தோடி வந்தேன்
என் பாவம் போக்கியே என்னை கழுவி
உம் அன்பின் சாட்சியாய்
என்னை நிறுத்தும்
Comments
Post a Comment