பரனே உனை நம்பினேன் உரமுடன் தாங்கையா

பரனே உனை நம்பினேன் உரமுடன் தாங்கையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

229. இராகம்: செஞ்சுருட்டி                       ஏகதாளம்

 

                             பல்லவி

 

          பரனே, உனை நம்பினேன்; உரமுடன்[1] தாங்கையா

 

                             சரணங்கள்

 

1.         அருள் தருவாயே; அகம் வருவாயே;

            திரிவினை தீர்த்து விடுவாயே; ஓகோ! - பரனே

 

2.         மானில மீது வரும் பலன் ஏது?

            வானில் எனைச் சேர்த்திடு வாயே; ஓகோ! - பரனே

 

3.         அலகையை[2] ஜெயித்தாய், அதின் திறம் அழித்தாய்;

            உலக அழுக்கனைத்தும் துடைத்தாய்; ஓகோ! - பரனே

 

4.         பாவிகட்காக, பரனே, நீ சாக

            பூ உலகில் வந்ததற்காக, ஓகோ; - பரனே

 

5.         தீயர்கள் உய்யத் தேவரீர் செய்ய

            மாய உலகில்வந்து மாண்டாய், ஓகோ! - பரனே

 

6.         விசுவாசம் தரவும், விசும்பில்[3] யான் வரவும்

            அசுசி அகற்றவும், அடியேனே ஓகோ! - பரனே

 

 

- ஜாண் பால்மர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] வலிமை

[2] பேய்

[3] வானில்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே