பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்
352. இராகம்: காம்போதி ஆதிதாளம்
பல்லவி
பணிந்து
நடந்து கொண்டாரே-பரன் பாலனும்
கனிந்து பிதா மாதாவுக்கு.
அனுபல்லவி
அணிந்து தேவ தயவைப்
பணிந்த மனதினோடு
தணிந்து அவர்க்கு
எதிர் முனைந்து சொல்லாதபடி, - பணி
சரணங்கள்
1. தந்தை தாய் தனை
மதித்து-அவருடைய
தயவின் சித்தத்துக் கமைந்த
மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி, - பணி
2. தந்தைக் குகந்த
வேலையில்-அவருடனே
விந்தை யுடனே
பயின்றார்;
நிந்தை யிதுவென்றெண்ணிச்
சிந்தைக் கலங்கிடாமல்
எந்த விதமும் நரர்[1] தன்னைப்
பின்பற்றியேகப் - பணி
3. பாவம் ஒன்று தவிர நம்மைப் போல
பாடுள்ளவராய்
நின்றாரே;
நாவின் கிரியையாலும்
நடந்தாரே புனிதமாய்;
பாவி யவரைக்கண்டு
பயிலுவது நன்று - பணி
4. ஆவி பல முமடைந்தார்;-உலக தேவ
அறிவிலும் நிறைவு கொண்டார்;
தேவ கிருபையிலும்
திருமறை முறையிலும்
பூவிலவர்க்கு
நிகர் புனித னில்லாதபடி, - பணி
- அருள்திரு. சா. சீமோன்
YouTube Link
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment