பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்

பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

352. இராகம்: காம்போதி                                              ஆதிதாளம்

 

                             பல்லவி

 

                   பணிந்து நடந்து கொண்டாரே-பரன் பாலனும்

                        கனிந்து பிதா மாதாவுக்கு.

 

                             அனுபல்லவி

 

            அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு

            தணிந்து அவர்க்கு எதிர் முனைந்து சொல்லாதபடி, - பணி

 

                             சரணங்கள்

 

1.         தந்தை தாய் தனை மதித்து-அவருடைய‌

            தயவின் சித்தத்துக் கமைந்த

            மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று

            சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி, - பணி

 

2.         தந்தைக் குகந்த வேலையில்-அவருடனே

            விந்தை யுடனே பயின்றார்;

            நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்

            எந்த விதமும் நரர்[1] தன்னைப் பின்பற்றியேகப் - பணி

 

3.         பாவம் ஒன்று தவிர நம்மைப் போல

            பாடுள்ளவராய் நின்றாரே;

            நாவின் கிரியையாலும் நடந்தாரே புனிதமாய்;

            பாவி யவரைக்கண்டு பயிலுவது நன்று - பணி

 

4.         ஆவி பல முமடைந்தார்;-உலக தேவ‌

            அறிவிலும் நிறைவு கொண்டார்;

            தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்

            பூவிலவர்க்கு நிகர் புனித னில்லாதபடி, - பணி

 

 

- அருள்திரு. சா. சீமோன்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] மானிடர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்