அமலா தயாபரா அருள்கூர் ஐயா
33. இராகம்: ரீதிகௌள ஆதிதாளம்
பல்லவி
அமலா[1],
தயாபரா, அருள்கூர், ஐயா, குருபர[2]
சரணங்கள்
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும்
தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த - அம
2. அந்தம் அடி[3]
நடு இல்லாத தற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத[4]
சோதிப்பிரகாச நீதி. - அம
3. ஞானத் ரவிய
வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப்ரசாத[5]
மகிமைக் களவில்லாத. - அம
3. காணப்படா அரூப,
கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப[6],
சுகிர்தத்[7]
திருத் தயாப. - அம
4. சத்ய வசன நேயா,
சமஸ்த புண்ய சகாயா,
கர்த் தத்துவ உபாயா, கருணை பொழியும்
வாயா - அம
5. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல்
அரிதாம் நிதான, துல்லிபத்[8]
தொன்றாம் மேலான - அம
6. கருணாகரா, உப காரா,
நிராகரா,[9]
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அம
- வே.சா
Comments
Post a Comment