பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது

பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது

                   பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது

                        பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது (2)

                        தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது

                        கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது...

                        சத்தம் கேட்குது - பரலோகத்தில்

 

1.         என் பிதாவே என் பிதாவே மனம் இரங்கும்

            என் இரத்தத்தின் குரல் கேட்டு

            மனமிரங்கும்... மனமிரங்கும்

 

2.         தகப்பனே என் தகப்பனே நீர் கருணை செய்யும்

            சிலுவை பாடுகளை நினைத்தருளி

            கருணை செய்யும்... கருணை செய்யும்

 

3.         நீதி பிதாவே என் ஜனத்தை கைவிடாதிரும்

            என் ஆத்தும பலியை எண்ணி

            மீட்டுக்கொள்ளும்.... மீட்டுக்கொள்ளும்

 

4.         அன்பு தகப்பனே என் ஜனத்தை சுகப்படுத்தும்

            என் காயங்கள் கண்டு - நீரும்

            சுகப்படுத்தும்... சுகப்படுத்தும்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே