17 September 2018

நாம் நித்திரைபண்ணி விழித்தோம்

12. Melcombe                                                                        L.M.

"New every morning is the love"

                        நாம் நித்திரைபண்ணி விழித்தோம்,
                        நற்சுகம் பலம் அடைந்தோம்;
                        நாள்தோறும் தெய்வ அன்பையே
                        உணர்ந்து ஸ்துதி செய்வோமே.

            2.         தீங்கை விலக்கிப் பாவத்தை
                        மன்னித்து, மோட்ச நம்பிக்கை
                        மென்மேலும் ஓங்க நாயனார்
                        கடாட்சஞ் செய்து காக்கிறார்.

            3.         அன்றன்று வரும் வேலையை
                        நாம் செய்கின்ற பணிவிடை
                        என்றெண்ணியே ஒவ்வொன்றையும்
                        படைப்போம் பலியாகவும்.

            4.         நம்மை வெறுத்து, தேவனின்
                        சமீபஞ் சேர விரும்பின்,
                        அன்றாடகக் கடமையும்
                        ஓர் ஏதுவாக விளங்கும்.

            5.         ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
                        கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
                        உம்மண்டை நாங்கள் வாழவும்
                        தகுந்தோர் ஆக்கியருளும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...