இயேசுவே கல்வாரியில்


Jesus keep me near the Cross
SS 134

333                                                     7, 6, 7, 6 with refrain

1.       இயேசுவே! கல்வாரியில்
                        என்னை வைத்துக்கொள்ளும்;
            பாவம் போக்கும் ரத்தமாம்
                        திவ்விய ஊற்றைக் காட்டும்.

                                    மீட்பரே! மீட்பரே!
                                                எந்தன் மேன்மை நீரே;
                                    விண்ணில் வாழுமளவும்
                                                நன்மை செய்குவீரே.

2.         பாவியேன் கல்வாரியில்
                        ரட்சிப்பைப் பெற்றேனே;
            ஞான ஜோதி தோன்றவும்
                        கண்டு பூரித்தேனே.

3.         ரட்சகா! கல்வாரியின்
                        காட்சி கண்டோனாக
            பக்தியோடு ஜீவிக்க
                        என்னை ஆள்வீராக.

4.         இன்னமும் கல்வாரியில்
                        ஆவலாய் நிற்பேனே;
            பின்பு மோட்ச லோகத்தில்
                        என்றும் வாழுவேனே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு