என் ரட்சகா நீர் என்னிலே


O Jesus Christ grow Thou in me
Gerontius.  Richmond

369                                                                             C.M.

1.         என் ரக்ஷகா, நீர் என்னிலே
                        மென்மேலும் விளங்கும்;
            பொல்லாத சிந்தை நீங்கவே
                        சகாயம் புரியும்.

2.         என் பலவீனம் தாங்குவீர்
                        மா வல்ல கரத்தால்;
            சாவிருள் யாவும் நீக்குவீர்
                        மெய் ஜீவன் ஜோதியால்.

3.         துராசாபாசம் நீங்கிடும்
                        உந்தன் பிரகாசத்தால்
            சுத்தாங்கக் குணம் பிறக்கும்
                        நல்லாவி அருளால்.

4.         மாசற்ற திவ்விய சாயலை
                        உண்டாக்கியருளும்;
            என்னில் தெய்வீக மகிமை
                        மென்மேலும் காண்பியும்.

5.         சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்
                        ஒப்பற்ற பலத்தால்;
            என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
                        பேரன்பின் ஸ்வாலையால்.

6.         நீர் பெருக, நான் சிறுக
                        நீர் கிரியை செய்திடும்;
            மெய் பக்தியில் நான் வளர
                        காடாட்சித்தருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு