சபையே இன்று வானத்தை


58. St. Magnus - Belmont Nottingham.                                            C.M.

"Lobt Gott, ihr Christen..."

1.       சபையே, இன்று வானத்தை
                        திறந்து தமது
            சுதனைத் தந்த கர்த்தரை
                        துதித்துக் கொண்டிரு.

2.         பிதாவுக்கொத்த இவரே
                        குழந்தை ஆயினார்;
            திக்கற்று முன்னணையிலே
                        வெட்காது கிடந்தார்.

3.         தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
                        உண்டாக ஆண்டவர்
            நரரின் ஸ்பாவமாய் இங்கே
                        வந்து பிறந்தனர்.

4.         தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;
                        இதென்ன அற்புதம்!
            இதுன்னத சிநேகம் ஆம்,
                        இதன்பின் பூரணம்.

5.         திரும்பப் பரதீசுக்கு
                        வழி திறந்துபோம்;
            கேரூபின் காவல் நீங்கிற்று
                        மகிழ்ந்து பாடுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு