கர்த்தாவே உம்மை நித்தமே

41. St. Fulbert                                            (370)               C.M.

"Ich singe dir mit Herz und Mund"

1.       கர்த்தாவே, உம்மை நித்தமே
                        துதித்துப் போற்றுவேன்;
            எல்லாரின் முன்னும் உம்மையே
                        அறிக்கை பண்ணுவேன்.

2.         எவ்வித பாக்கியங்களும்
                        உம்மாலே தான் உண்டே;
            உண்டான எந்த நன்மைக்கும்
                        ஊற்றானவர் நீரே.

3.         இக்கட்டில் நாங்கள் கூப்பிட்டால்
                        நீர் கேட்டிரங்குவீர்;
            எங்களைச் சுத்த தயவால்
                        ரட்சித்துத் தாங்குவீர்.

4.         அநந்த வாழ்வையும் இனி
                        கொடுத்தருள்வீரே;
            அடியாருக்கு நற்கதி
                        அப்போதுண்டாகுமே.

5.         ஆ! களிகூர்ந்து பூரித்து
                        மகிழ் என் உள்ளமே;
            பராபரன் தான் உனது
                        அநந்த செல்வமே.

6.         அவர் உன் பங்கு, உன் பலம்
                        உன் கேடகம்; நன்றாய்
            திடப்படுத்தும் உன் திடம்,
                        நீ கைவிடப்பட்டாய்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு