என் ஜீவன் போகும் நேரம்


The sands of time are sinking
Rutherford

394                                                                        7, 6, 7, 6 D.

1.         என் ஜீவன் போகும் நேரம்
                   சமீபம் வந்ததே;
            பேரின்ப அருணோதயம்,
                        இதோ! விடிந்ததே;
            ராக் கால மோசம் நீங்கும்
                        விண் சுடரொளியில்;
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில்.

2.         ஆ, நேச ஜீவ ஊற்று
                        என் அருள் நாதரே!
            ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்
                        அங்காழி போலாமே;
            பேரன்பின் பெருவெள்ளம்
                        பாய்ந்தோடும் மோட்சத்தில்;
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில்;

3.         அன்போடும் நீதியோடும்
                        என் சுக துக்கமும்
            ஆண்டென்னைப் பாதுகாத்து
                        வந்தார் எந்நேரமும்;
            ஆ! போற்றுவேன் தெய்வன்பை
                        ஆனந்த கடலில்;
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில் .

4.         நல் நித்திரை செய்து பின்பு
                        மாசற்றெழும்புவேன்;
            என் மீட்பரை நான் கண்டு
                        ஆனந்தம் அடைவேன்;
            ராஜாதி ராஜன் என்னை
                        அழைக்கும் நேரத்தில்
            மா அருள் ஜோதி வீசும்
                        பேரின்ப தேசத்தில் .

5.         தன் ஆடையைப் பாராமல்
                        பர்த்தாவின் முகத்தை
            பத்தினி நோக்குமாறு,
                        நான் ஜீவ கீரிடத்தை
            நோக்காமல், மீட்பர் மாண்பை
                        பார்ப்பேன் அவ்வேளையில்;
            இம்மானுவேலே ஜோதி
                        பேரின்ப தேசத்தில்!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு