என் கர்த்தாவே உம்மில் தான்


Meine Seele willst du ruhn
Cassel.  Heathlands

360                                                                 7, 7, 7, 7, 7, 7

            என் கர்த்தாவே, உம்மில் தான்
            முழு நெஞ்சத்தாலே நான்
            வாஞ்சை கொண்டு, நித்தமும்
            லோக வாழ்வை அற்பமும்
            குப்பையும் என்றெண்ணுவேன்,
            உம்மையே சிநேகிப்பேன்.

2.         லோகத்தாரின் களிப்பு
            துக்கங்கொண்ட நெஞ்சுக்கு
            சஞ்சலத்தையன்றியே,
            தேற்றத்தை உண்டாக்காதே;
            உம்மையே சிநேகிப்பேன்,
            அதால் பாக்கியம் அடைவேன்.

3.         தேவரீரில் வாழ்வெல்லாம்
            பூர்த்தியாகவே உண்டாம்;
            உம்மில் வாஞ்சை கொள்வோனாய்
            உண்மையான நேசனாய்
            சேர்வோனுக்குத் தேவரீர்
            அந்த வாழ்வைக் கொடுப்பீர்.

4.         ஆறுதலும் பூரிப்பும்,
            ஜீவனும் மகிழ்ச்சியும்
            உம்மால் தா என்றைக்கும்
            குறைவின்றிக் கிடைக்கும்;
            நீரே அன்பின் காரணர்;
            கருணைத் தயாபரர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு