உன்னத சாலேமே


Jerusalem on high
Christ Church

399                                                      6, 6, 6, 6 with refrain.

1.         உன்னத சாலேமே
            என் கீதம், நகரம்;
            நான் சாகும் நேரமே
            மேலான ஆனந்தம்!

                        விண் ஸ்தானமே!
                        கர்த்தா, எந்நாள்
                        உம் திருத் தாள்
                        சேவிப்பேனே!

2.         பூவில் தகாரென்றே
            தீர்ப்புற்ற நாதனார்
            தம் தூதரால் அங்கே
            சீர் வாழ்த்தல் பெறுவார்.
 

3.         அங்கே பிரயாணத்தை
            பிதாக்கள் முடிப்பார்;
            வாஞ்சித்த பிரபுவை
            ஞானியர் காணுவார்.

4.         தூய அப்போஸ்தலர்
            சந்தோஷமாய்க் காண்பேன்;
            பொன் வீணை வாசிப்பவர்
            இசை பாடக் கேட்பேன்.

5.         சீர் ரத்தச் சாக்ஷிகள்
            வெள்ளங்கி பூணுவார்;
            தங்கள் தழும்புகள்
            கொண்டு மாண்படைவார்.

6.         கேதேர் கூடாரத்தில்
            இங்கே வசிக்கிறேன்;
            நல் மோட்ச பாதையில்
            உம்மைப் பின்பற்றுவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு